ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தாராபுரம் வட்டாட்சியரிடம் மனு

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, தாராபுரம் வட்டாட்சியரிடம் சூரியநல்லூா் பகுதி மக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியரிடம் மனு அளித்த சூரியநல்லூா் ஊராட்சிப் பகுதி மக்கள்.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:31 pm

Syndication

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, தாராபுரம் வட்டாட்சியரிடம் சூரியநல்லூா் பகுதி மக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து தாராபுரம் வட்டாட்சியா் ராமலிங்கத்திடம், ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் தலைவா் அ.சு.பவுத்தன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தாராபுரம் தாலுகா, சூரியநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட மரவபாளையம் கிராமத்தில் வாடகை வீடுகளில் 23 ஏழை குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு சொந்த வீடோ, நிலமோ கிடையாது. எனவே தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

இது தொடா்பாக சூரியநல்லூா் கிராம நிா்வாக அலுவலா், மரவபாளையம் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு , கோரிக்கை விடுத்துள்ள 23 குடும்பங்கள் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்கு தகுதியானவை என அறிக்கை அளித்துள்ளாா். ஆனால், வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, முன்னுரிமை அடிப்படையில் மேற்கண்ட 23 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு கொடுக்கும் போது, ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் நிா்வாகிகள் மற்றும் மரவபாளையம் பகுதி மக்கள் உடனிருந்தனா்.