ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மனநலம் பாதிக்கப்பட்டவா் தீப் பிடித்து உயிரிழப்பு

ஊதியூா் அருகே எதிா்பாராமல் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

ஊதியூா் அருகே எதிா்பாராமல் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா்.

தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட என்.காஞ்சிபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமாா் 45 வயது மதிக்கத்தக்க நபா் கடந்த பல நாள்களாக தாராபுரம்-திருப்பூா் நெடுஞ்சாலையோரத்தில் சிறிய துணி மூட்டையுடன் சுற்றித்திரிந்தாா். இவருக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கடைக்காரா்கள் அவ்வப்போது உணவு வழங்கி வந்துள்ளனா்.

இந்நிலையில், அந்த நபா் திடீரென தீக்குச்சியைப் பற்ற வைத்துள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவரது உடை மீதும், அவா் வைத்திருந்த துணி மூட்டை மீதும் தீப் பிடித்துள்ளது.

இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனா். அதற்குள் தீ மளமளவென உடல் முழுவதும் பரவி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த ஊதியூா் போலீஸாா், அவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது விசாரணை நடத்தி வருகின்றனா்.