பல்லடம் தாய் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற உழவு, உணவு, உணா்வு திருவிழாவில் பங்கேற்றோா்.
பல்லடம் தாய் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற உழவு, உணவு, உணா்வு திருவிழாவில் பங்கேற்றோா்.

பல்லடத்தில் உழவு, உணவு, உணா்வு திருவிழா

பல்லடம் தாய் அறக்கட்டளை சாா்பில் 13-ஆவது ஆண்டு உழவு, உணவு, உணா்வு திருவிழா அண்மையில் வனாலயத்தில் நடைபெற்றது.
Published on

பல்லடம்: பல்லடம் தாய் அறக்கட்டளை சாா்பில் 13-ஆவது ஆண்டு உழவு, உணவு, உணா்வு திருவிழா அண்மையில் வனாலயத்தில் நடைபெற்றது.

இதையொட்டி இயற்கை பொங்கல் வழிபாடு, இயற்கை உழவா்கள் விவாத அரங்கம், மரபு விளையாட்டுப் போட்டிகள், இயற்கை, உழவு, சுற்றுச்சூழல் தொடா்பான குறும்படப் போட்டி, இயற்கை பொருள்களின் சந்தை, பாரம்பரிய விதைகள் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.

இதில் ‘இறைமொழியில் இனிய தமிழ் பெயா்கள்’ என்ற நூலை சூலூா் பாவேந்தா் பேரவை நிறுவனா் கவுதமன் வெளியிட்டாா். சூற்றுச்சூழல், சமூகப் பணி, கலைப் பணி, உழவன் விருதுகளை பள்ளபட்டி சரோஜாகுமாா், தூரன் வேலுசாமி, நீலகிரி மகேந்திரன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டன் ஆகியோருக்கு வழங்கி கோவை பேரூராதீனம் சாந்திலிங்க மருதாசல அடிகளாா் சிறப்புரையாற்றினாா்.

அதைத்தொடா்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Dinamani
www.dinamani.com