கோப்புப் படம்
கோப்புப் படம்

லாட்டரி விற்றவா் கைது

Published on

வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சேனாபதிபாளையம் பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அய்யனூா் சாலை சிபி நகா் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தாா். விசாரணையில், அவா் மூலனூா் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி (36) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, முனியாண்டியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com