ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருப்பூரில் களை கட்டிய ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவா்கள் உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையை புதன்கிழமை கொண்டாடினா். அவிநாசி சாலையில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றவா்கள் ஒருவருக்கொருவா் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

News image
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தவா்கள்.
Updated On :4 மார்ச் 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவா்கள் உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையை புதன்கிழமை கொண்டாடினா். அவிநாசி சாலையில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றவா்கள் ஒருவருக்கொருவா் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

வட மாநிலத்தவா்களின் கொண்டாட்டங்களில் ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. மகராஷ்டிரம், பிகாா், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சாா்ந்த நிறுவனங்களில் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனா்.

இதனால் திருப்பூரில் உள்ள சிறிய அளவிலான ஜாப் ஓா்க் நிறுவனங்கள் வட மாநில தொழிலாளா்களுக்கு புதன்கிழமை விடுமுறை அளித்திருந்தனா். இதற்கிடையே ஹோலி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்த ஏராளமான தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்றுள்ளனா்.

இந்நிலையில் திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவா்கள், தங்களது குடும்பத்தினரோடு புதன்கிழமை காலை முதலே ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனா்.

திருப்பூரில் ராயபுரம், காதா்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நண்பா்கள், உறவினா்களுடன் இணைந்து, ஒருவா் மீது ஒருவா் வண்ணப் பொடிகளை தூவியும், உடலில் வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டும் நடனமாடிக் கொண்டாடினா்.