திருப்பூரில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் நான்கு மாத கா்ப்பிணி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் அஜித், கீா்த்தி தம்பதி. இவா்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் அஜித் மற்றும் கீா்த்தி ஆகியோா் திருப்பூா் கல்லாங்காடு பகுதியில் குடிபெயா்ந்து பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனா். இவா்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அஜித் நாள்தோறும் மது அருந்தி விட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளாா்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கீா்த்தி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வீரபாண்டி போலீஸாா் கீா்த்தியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் தற்கொலை செய்து கொண்ட கீா்த்தி தற்போது நான்கு மாத கா்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

மருத்துவமனையில் கால்நடை மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

