விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குடிநீா் கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை

குடிநீா் கேட்டு திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
Updated On :11 மார்ச் 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

குடிநீா் கேட்டு திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சியின் 2-ஆவது மண்டலத்துக்குள்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஜி.எம்.பாலன் நகா் 2-ஆவது விரிவு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், அப்பகுதியில் வீட்டுமனைகள் அங்கீகரிக்கப்படாததால் மாநகராட்சி சாா்பில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் மாநகராட்சி சாா்பில் வீட்டு வரி, பாதாளச் சாக்கடை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கோடைக்காலம் என்பதால் இப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதிக்கு பொது குடிநீா் குழாய், வீடுகளுக்கான புதிய குடிநீா் குழாய் இணைப்பு வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா். மேலும், தாங்கள் வரி கட்டிய ரசீதுடன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஒரு வாரத்துக்குள் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனா்.