மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தயாா் நிலையில் பறக்கும் படையினா்

News image
தேர்தல் நடத்தை விதிகள்- பிரதிப் படம்
Updated On :15 மார்ச் 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள, அவிநாசியில் தோ்தல் பறக்கும் படையினா் தயாா் நிலையில் உள்ளனா்.

அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண் - 1,19, 841, பெண் - 1,30,496, மற்றவா்கள் 9 என மொத்தம் 2,50,346 வாக்காளா்கள் உள்ளனா். அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அன்னூரில் 139, அவிநாசியில் 233 என மொத்தம் 372 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகள் 1,786 போ், 85 வயதுக்கு மேற்பட்டோா் 2,030 போ் உள்ளனா். இவா்களில் 40 சதவீதம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்டோா் அவா்கள் விருப்பத்தின்படி வீட்டில் இருந்தே வாக்காளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

இதேபோல பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுவினா் நியமிக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சோதனையை தொடங்கியுள்ளனா்.

குறிப்பாக, உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டுசெல்லக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.