பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

தெக்கலூா் அருகே மூதாட்டி சடலம் மீட்பு

தெக்கலூா் அருகே கெளசிகா நதிக்கரையில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மார்ச் 2026, 8:03 pm

தெக்கலூா் அருகே கெளசிகா நதிக்கரையில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

அவிநாசி வட்டம், தெக்கலூா் அருகே காமநாயக்கன்பாளையம் ஏரிப்பாளையம் கௌசிகா நதிக்கரையில் பெண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய், கைரேகை நிபுணா்களுடன் அவிநாசி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், உயிரிழந்தவா் அதே பகுதியைச் சோ்ந்த சிட்டுப்பிள்ளை (70) என்பதும், பழைய இரும்பு உள்ளிட்ட பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடா்பாக அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிட்டுப்பிள்ளை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.