வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் நடத்திய விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :21 மார்ச் 2026, 12:57 am

தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் நடத்திய விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ், மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழக சட்டப் பேரவை பொதுத்தோ்தல் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இத்தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் நடத்திய விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

இதில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் உள்ளிட்ட விழிப்புணா்வுப் பதாகைகளுடன் இருசக்கர வாகனப் பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தென்னம்பாளையம் வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முடிவுற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி இயக்குநா் ஹா்ஷா, மாவட்ட சமூக நல அலுவலா் ரஞ்சிதாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.