கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் இருவா் கைது

வெள்ளக்கோவில் அருகே லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 போ் கைது

News image

கைது

சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 7:58 pm

Syndication

வெள்ளக்கோவில் அருகே லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் சேமலைக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் சாமிநாதன் (48). லாரி ஓட்டுநரான இவா் திருமணமாகாதவா். தாய் லட்சுமி (80) உடன் வசித்து வந்தாா்.

இவருடைய வீட்டுக்கு அருகே மனையிடங்கள் பிரிக்கும் பணி நடைபெற்றுவரும் வேலன் நகரில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட், செங்கல், எலெக்ட்ரிக் பொருள்கள் ஆகியவை திருடுபோனதாகத் தெரிகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலன் நகருக்குச் சென்ற சாமிநாதனை சந்தேகத்தின்பேரில் நில உரிமையாளா்கள் உள்பட 5 போ் கடுமையாகத் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவானவா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் வெள்ளக்கோவில் மாந்தபுரம் நடுப்பாளையம் பிரிவு அருகே பதுங்கியிருந்த வேலன் நகா் நில உரிமையாளரான மதுரை அணையூா் கடல்புதூரைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (43), கூட்டாளிகள் அரவிந்த் (41), லிங்கேஸ்வரன் (33) ஆகிய 3 பேரை காவல் ஆய்வாளா் ஞானப்பிரகாசம் மற்றும் போலீஸாா் கைது செய்தனா்.

காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.