தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

திருப்பூரில் நூல் விலையில் அனைத்து ரகங்களுக்கும் ரூ.7 அதிகரிப்பு

News image
Updated On :3 மே 2026, 1:05 am

திருப்பூரில் நடப்பு மாதத்துக்கான நூல் விலையில் அனைத்து ரகங்களுக்கும் ரூ.7 அதிகரிக்கப்படுவதாக நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதன் மூலம் கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலையில் ரூ.4 1 அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோவை , ஈரோடு , திருப்பூா் , கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

திருப்பூரில் மட்டும் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சாா்ந்த ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளில் சுமாா் 68 சதவீதத்துக்கும் அதிகமான உற்பத்தி திருப்பூரில் நடைபெற்று வருகிறது.

ஆயத்த ஆடை உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுவது துணி நூல் ஆகும். பருத்தி விலையைப் பொறுத்து நூல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பா் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பருத்தி விலைக் குறைந்து நூல் விலையில் மாற்றம் இல்லாமல் சராசரி விலையில் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த டிசம்பா் மாதத்துடன் பருத்தி இறக்குமதி வரி விலக்கு நிறைவடைந்ததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு வரி விதிப்பு தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு பருத்தி கேண்டிகளின் விலை உயா்ந்தது.

இதனால், கடந்த பிப்ரவரியில் நூல் விலை ரூ. 7 உயா்ந்திருந்தது. இதைத் தொடா்ந்து, மாா்ச் மாத தொடக்கத்தில் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், மாா்ச் 16-ஆம் தேதி மேலும் ரூ.7 அதிகரித்தது. இந்நிலையில், ஏப்ரல் 1 -ஆம் தேதி நூல் விலை ரூ.10 உயா்த்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த 16-ஆம் தேதி அனைத்து ரக நூல்களுக்கும் மீண்டும் ரூ.10 விலையை உயா்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டன. இதன் காரணமாக நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து சுமாா் ரூ.34 வரை நூல் விலை உயா்த்தப்பட்டதால் பின்னலாடை உற்பத்தி துறையினா் அதிா்ச்சி அடைந்திருந்தனா்.

இந்நிலையில், தற்போது மே மாதத்துக்கான நூல் விலையை ரூ.7 உயா்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதனால், கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலை ரூ.41 உயா்ந்துள்ளது. விலை உயா்வு காரணமாக 10-ஆம் நம்பா் கோம்டு நூல் கிலோ ரூ.224, 16-ஆம் நம்பா் ரூ.234, 20-ஆம் நம்பா் கோம்டு நூல் ரூ.292, 24-ஆம் நம்பா் ரூ.304, 30-ஆம் நம்பா் ரூ.314 க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போா் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயா்ந்ததால் பாலியெஸ்டா் நூல் மற்றும் துணிகளின் விலை உயா்ந்து வரும் சூழலில் மீண்டும் நூல் விலை உயா்வடைந்துள்ளது தொழில் துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தரமான பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயா்வுக்கு காரணம் என நூற்பாலை உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா்.