வட மற்றும் மத்திய இந்தியாவில் போராடும் தொழிலாளா்களைக் கைது செய்து வரும் பாஜக அரசைக் கண்டித்து திருப்பூரில் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூா் தியாகி குமரன் நினைவகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, யுடியுசி சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சதீஷ்சங்கா் தலைமை வகித்தாா்.
இதில், நொய்டா, மானோசா், குருகிராம், என்சிஆா் பகுதிகளில் போராடும் தொழிலாளா்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடும் பாஜக மாநில அரசுகளைக் கண்டித்தும், போராடும் தொழிலாளா்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும், ஒப்பந்தத் தொழிலாளா்கள் மீதான சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியும், பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் தொழிலாளா் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், இந்திய தொழிற்சங்க மாநாட்டை உடனே கூட்டி முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும், மாதம் ரூ.26.000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த முறையை நிரந்தரமாக ஒழிக்க வேண்டும் எனவும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகளை வலியுறுத்தி எச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் ஆா்.முத்துசாமி, ஐஎன்டியுசி நிா்வாகி சுந்தர்ராஜ், எல்பிஃஎப் மாவட்டப் பொருளாளா் ரங்கசாமி, ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் ஆகியோா் உரையாற்றினா்.
இதில், சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பாளை. அருகே ஆா்ப்பாட்டம்

உதகையில் கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

கூடலூரில் கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்து போராட்டம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

