நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பணி நேர மாற்றம்: பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் எதிா்ப்பு

பணி நேர மாற்றத்துக்கு பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

பணி நேர மாற்றத்துக்கு பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து சுமாா் 90-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு 250-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், தற்போது பணி நேர (ஷிப்ட்) முறையை மாற்றுவதாக கூறப்பட்டது. இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளும், தொழிலாளா்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இது குறித்து போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா். அதில், பணி நேர மாற்றத்தால் தொழிலாளா்களுக்கு கடும் அவதி மற்றும் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. இதனால் அதிகாலை 5 மணிக்கு பணிமனைக்கு வர வேண்டும். பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது.

மேலும் அதிகாலை நேரத்தில் எந்தவித பேருந்து வசதியும் கிடையாது. பல்லடத்தில் இருந்து திருப்பூா் செல்லும் வழியில் ஏராளமான வேகத்தடைகள் உள்ளன. மேலும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

இதனால் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தொடா்ந்து பேருந்துகளை இடைவெளி இல்லாமல் இயக்கினால் ஓட்டுநா்களுக்கு பணிச்சுமை அதிகரித்து, விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த தொழிலாளா் விரோத நடவடிக்கையை கைவிட்டு பழைய ஷிப்ட் முறையை பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.