கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக் கழக அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை, கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைதியான முறையில் கடந்த 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அன்று மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவு அடைந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன.
பண்ருட்டி மற்றும் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பண்ருட்டியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான பணிக்கன்குப்பத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வாக்கு எண்ணிக்கை மே.4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக் கழக அரசுப் பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் வாக்கு எண்ணும் பணி: 300 போ் ஈடுபடவுள்ளனா்

மே 4 வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்? வழிமுறைகள் என்னென்ன?

திருப்பூா் வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி கேமராக்களில் நேர மாறுபாடு! அரசியல் கட்சி புகாா்!

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


