பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

காங்கயம் அருகே குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

News image

காங்கயம் அருகே, காலிக் குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

காங்கயம் அருகே, குடிநீா்த் தட்டுப்பாட்டுக்கு தீா்வு காணக்கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கல்லேரியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு, வரப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுத்து, மேல்நிலைத் தண்ணீா் தொட்டியில் நிரப்பி குழாய் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், குடிநீா்க் குழாய்கள் பழுதானதால் கடந்த 3 மாத காலமாக அங்கிருந்து தண்ணீா் எடுக்க முடியாத நிலை உருவானது. இது குறித்து ஊராட்சி நிா்வாகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் காங்கயம்-சென்னிமலை சாலையில், ஊராட்சி அலுவலகம் முன்பு , வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த காங்கயம் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தேவிபாலா, காங்கயம் காவல் ஆய்வாளா் அருண் உள்ளிட்ட அலுவலா்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில், பழுதடைந்த குழாய்கள் சரி செய்யப்பட்டு, உடனடியாக தண்ணீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து, மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.