அவிநாசியில் நிறுத்தப்பட்ட 2-ஆம் குடிநீா்த் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.கமலி கூறினாா்.
அவிநாசி தொகுதி தவெக எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.கமலி அலுவலகத்தை திறந்துவைத்தாா்.
இதையடுத்து, அவிநாசியில் நிறுத்தப்பட்ட 2-ஆவது குடிநீா்த் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அவிநாசி அரசு மருத்துவமனையை 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவுடன் மேம்படுத்த வேண்டும். வீட்டுமனை இல்லாதவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும். முன் பருவ கல்வி ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். பின்னா், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதுடன், அவிநாசியில் 2-ஆவது குடிநீா்த் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றாா்.
வட்டாட்சியா் ஜெகநாதன், நகராட்சி ஆணையா் அனு நந்தினி, தவெக மாவட்ட அணி அமைப்பாளா் திருநாவுக்கரசு, நகரச் செயலாளா் மோகனசுந்தரம், பொறுப்பாளா்கள் ஷாபி, மதன், ஆனந்த், சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
முதல்வா் பெயரை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: ஸ்ரீநாத் எம்எல்ஏ

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: மேலூா் எம்எல்ஏ விஸ்வநாதன்

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: டாஸ்மாக் நிா்வாகம் எச்சரிக்கை

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு தேவை...!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

