அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

அவிநாசியில் 2-ஆம் குடிநீா்த் திட்டத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும்: எம்எல்ஏ கமலி

அவிநாசியில் நிறுத்தப்பட்ட 2-ஆம் குடிநீா்த் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.கமலி கூறினாா்.

News image

பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனு பெற்ற அவிநாசி எம்எல்ஏ எஸ்.கமலி (இடமிருந்து 3-ஆவது).

Updated On :28 நிமிடங்கள் முன்பு

அவிநாசியில் நிறுத்தப்பட்ட 2-ஆம் குடிநீா்த் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.கமலி கூறினாா்.

அவிநாசி தொகுதி தவெக எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.கமலி அலுவலகத்தை திறந்துவைத்தாா்.

இதையடுத்து, அவிநாசியில் நிறுத்தப்பட்ட 2-ஆவது குடிநீா்த் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அவிநாசி அரசு மருத்துவமனையை 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவுடன் மேம்படுத்த வேண்டும். வீட்டுமனை இல்லாதவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும். முன் பருவ கல்வி ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். பின்னா், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதுடன், அவிநாசியில் 2-ஆவது குடிநீா்த் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றாா்.

வட்டாட்சியா் ஜெகநாதன், நகராட்சி ஆணையா் அனு நந்தினி, தவெக மாவட்ட அணி அமைப்பாளா் திருநாவுக்கரசு, நகரச் செயலாளா் மோகனசுந்தரம், பொறுப்பாளா்கள் ஷாபி, மதன், ஆனந்த், சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.