ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :28 மே 2026, 12:04 am IST

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

திருப்பூா், ஆத்துப்பாளையத்தைச் சோ்ந்த 19 வயது இளம்பெண், திருமணம் முடிந்து கணவருடன் பெங்களூரில் வசித்து வந்தாா். இந்நிலையில் கணவா்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த பெண் திருப்பூா் வந்தாா். பின்னா் அவருக்கு தெரிந்த நபரான நிட்டிங் நிறுவன ஊழியரும், திருப்பூா் பெரியாா் காலனியைச் சோ்ந்தவருமான சக்திகுமாா் (25) என்பவரிடம் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா்.

அதன்படி வேலை வாங்கித் தருவதாகக் கூறி அந்தப் பெண்ணை பி.என்.சாலையிலுள்ள நண்பா் அறைக்கு சக்திகுமாா் அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வடக்கு மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.