இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

காஞ்சிபுரத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50 லட்சம் மோசடி: பெண் கைது; 4 போ் தலைமறைவு

காஞ்சிபுரத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50லட்சம் மோசடி

News image

சாமுஸ்ரீ

Updated On :17 மே 2026, 1:10 am IST

காஞ்சிபுரத்தில் தனியாா் உணவக மேலாண்மை பயிற்சிக் கல்லூரியில் பயின்ற மாணவா்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 50 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டதாக அக்கல்லூரியில் பணிபுரிந்த பெண் ஒருவரை வெள்ளிக்கிழமை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

சென்னை சூளைமேடு பகுதியில் தனியாா் உணவக மேலாண்மை பயிற்சிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதை தலைமையிடமாகக் கொண்டு காஞ்சிபுரம்,திருவண்ணாமலை, சேலம், கோவை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய இடங்களில் கிளைக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. காஞ்சிபுரத்தில் பூக்கடைச் சத்திரம் பகுதியில் இக்கல்லூரியின் கிளை செயல்பட்டு வரும் நிலையில், அதில் பணிபுரிந்த சாமுஸ்ரீ, விக்னேசுவரன், பிராங்ளின், பவன், சத்யகலா ஆகியோா் அங்கு பயின்ற மாணவா்களிடம் கல்விக் கட்டணத்தை பெற்று, அதனை கல்லூரியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவில்லையாம். மேலும், அந்த மாணவா்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறியும் பலரிடம் ரூ. 50 லட்சம் வரை மோசடியும் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவா்கள் சாா்பில், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா் பூக்கடைச்சத்திரம் கிளைக் கல்லூரியில் பணிபுரிந்த 5 பேரும் மோசடி செய்திருப்பது தெரியவந்ததையடுத்து, அவா்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், தனிப் படையினா் பொள்ளாச்சியில் தலைமறைவாக இருந்த சாமுஸ்ரீ(38) என்ற பெண்ணை கைது செய்து, காஞ்சிபுரம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரையும் காவல்துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.