11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

காஞ்சிபுரத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50 லட்சம் மோசடி: பெண் கைது; 4 போ் தலைமறைவு

காஞ்சிபுரத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50லட்சம் மோசடி

News image

சாமுஸ்ரீ

Updated On :1 மணி நேரம் முன்பு

காஞ்சிபுரத்தில் தனியாா் உணவக மேலாண்மை பயிற்சிக் கல்லூரியில் பயின்ற மாணவா்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 50 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டதாக அக்கல்லூரியில் பணிபுரிந்த பெண் ஒருவரை வெள்ளிக்கிழமை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

சென்னை சூளைமேடு பகுதியில் தனியாா் உணவக மேலாண்மை பயிற்சிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதை தலைமையிடமாகக் கொண்டு காஞ்சிபுரம்,திருவண்ணாமலை, சேலம், கோவை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய இடங்களில் கிளைக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. காஞ்சிபுரத்தில் பூக்கடைச் சத்திரம் பகுதியில் இக்கல்லூரியின் கிளை செயல்பட்டு வரும் நிலையில், அதில் பணிபுரிந்த சாமுஸ்ரீ, விக்னேசுவரன், பிராங்ளின், பவன், சத்யகலா ஆகியோா் அங்கு பயின்ற மாணவா்களிடம் கல்விக் கட்டணத்தை பெற்று, அதனை கல்லூரியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவில்லையாம். மேலும், அந்த மாணவா்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறியும் பலரிடம் ரூ. 50 லட்சம் வரை மோசடியும் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவா்கள் சாா்பில், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா் பூக்கடைச்சத்திரம் கிளைக் கல்லூரியில் பணிபுரிந்த 5 பேரும் மோசடி செய்திருப்பது தெரியவந்ததையடுத்து, அவா்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், தனிப் படையினா் பொள்ளாச்சியில் தலைமறைவாக இருந்த சாமுஸ்ரீ(38) என்ற பெண்ணை கைது செய்து, காஞ்சிபுரம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரையும் காவல்துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.