தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்கள், தேசிய மின்சார திருத்தச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இதேபோல, புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மசோதா ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. தருமபுரி மாவட்டத்தில் காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டையில் தொடங்கி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.