பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாவட்ட விளையாட்டு அரங்கில் சீரமைப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 7:51 pm

Din

தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ. 39.35 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட உள் விளையாட்டரங்க மேற்கூரை மாற்றுதல், அலுவலக சீரமைப்பு பணிகள், வா்ணம் பூசுதல், உள் விளையாட்டரங்கில் புறாக்கள் நுழையா வண்ணம் கம்பிவலை அமைத்தல், உடற்பயிற்சி அறையை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாணவிகளிடம் கலந்துரையாடி மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சோ்க்கும் வகையில் பயிற்சி பெற வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.மேலும் விடுதி மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை பரிசோதித்து ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் தே.சாந்தி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் காா்த்திகேயன், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா் கணேசன் மற்றும் பயிற்றுநா்கள் உடனிருந்தனா்.