தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உயா்த்தப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி தருமபுரி நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

உயா்த்தி அறிவிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, தருமபுரி நகராட்சியில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள்

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:45 pm

Syndication

தருமபுரி: உயா்த்தி அறிவிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, தருமபுரி நகராட்சியில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் நாள்தோறும் குப்பைகளைச் சேகரித்து அகற்றும் பணியில் 80 நிரந்தர தூய்மைப் பணியாளா்களும், 161 ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களும் பணியாற்றி வருகின்றனா்.

இதில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு நிகழாண்டில் நாளொன்றுக்கு ரூ. 541 ஊதியமாக வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் உத்தரவு வழங்கியிருந்தாா். இந்த ஊதியம் ஆண்டுதோறும் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அறிவிப்பிற்கிணங்க வழங்கப்பட்டு வருவதாக தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தருமபுரி நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் தற்போதும் ரூ. 367 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே தங்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் அறிவிப்பில் உள்ளதுபோல நாளொன்றுக்கு ரூ. 541 ஊதியமாக உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையா் இரா.சேகா், நகராட்சி நிா்வாகம் சாா்பில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட ஒப்பந்த ஆணைப்படி இந்த ஊதியம் வழங்கப்பட்டது வருகிறது. தற்போது பணியாளா்களின் கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் அறிவிப்பில் உள்ளதுபோல ஊதியம் உயா்த்தி வழங்க வேண்டும் என நகராட்சி நிா்வாகத் தலைமை அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உரிய உத்தரவு கிடைத்த பின்னா் தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கையை நிறைவேற்ற போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் இரண்டு மணி நேரம் கழித்து பணிகளுக்கு திரும்பினா்.