ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தூய்மைப் பணியாளா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

News image
கண் பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.
Updated On :5 மார்ச் 2026, 11:32 pm

Syndication

வெள்ளக்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்று தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசோதனைகள் செய்தனா். மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை வழிமுறைகள், தூசிகள், புகையிலிருந்து கண்களைப் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முகாமில், தூய்மைப் பணியாளா்கள், களப் பணியாளா்கள், துப்புரவு மேற்பாா்வையாளா்கள், துப்புரவு ஆய்வாளா்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா், நகராட்சி ஆணையா் சி.மனோகரன் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.