திருப்பூரில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
இந்த முகாமில், பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, நிா்வாகம் மற்றும் ஆடைத் துறையில் உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, ஆடை வடிவமைப்பு போன்றவற்றுக்கும், தகவல் தொழில்நுட்பம், ஆவண நிா்வாகம், நிதி, மனிதவள நிா்வாகம், காப்பீட்டு நிா்வாகம் உள்ளிட்டவற்றுக்கும் மாணவா்களைத் தோ்வு செய்தனா். இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்கள் 220 மாணவா்கள் முகாமில் பங்கேற்றனா்.
முதல்நிலைத் தோ்வு கல்லூரியில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் நிலைத் தோ்வு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நடைபெறும் என்றும், அதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.6 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமை கல்லூரி துறைத் தலைவா் சம்பத், முதல்வா் ராதாமணி, மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, வேலைவாய்ப்பு அலுவலா் சத்தியநாராயணன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
தொடர்புடையது

டி.ஜி. வைணவ கல்லூரியில் 446 பேருக்கு பணி நியமன ஆணை

செங்கல்பட்டில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருவள்ளூா்: மே 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நிஃப்ட் டீ பேஷன் கல்லூரியில் மாணவா்களின் படைப்பாற்றல்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



