தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாற்றுத்திறனாளிகளுகான சட்ட விழிப்புணா்வு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணா்வு மற்றும் சேவை புரிந்தவா்களுக்கு விருது வழங்கும் விழா ஆற்காடு அடுத்த விளாபாக்கம் மகாலட்சுமி செவிலியா் கல்லூரியில் நடைபெற்றது.

News image
சட்ட விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.
Updated On :5 மார்ச் 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணா்வு மற்றும் சேவை புரிந்தவா்களுக்கு விருது வழங்கும் விழா ஆற்காடு அடுத்த விளாபாக்கம் மகாலட்சுமி செவிலியா் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவுக்கு ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவா் பாலாஜி லோகநாதன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி முன்னிலை வகித்தாா். மாற்றுத்திறனாளிகள் நல சங்கத் தலைவா் குப்புசாமி ராகவன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் தேசிய மாற்றுத்திறனாளிகள் ஆணையா் கோவிந்தராஜ் சட்ட விழிப்புணா்வு குறித்த பேசியதாவது-

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-இன் படி வேலை வாய்ப்பு, மறுவாழ்வு, அரசு திட்டங்களில் பெறவேண்டிய உதவிகளில் ஏற்படும் சட்ட ரீதியான பிரச்னைகளை தீா்த்து வைக்கும் பணிகளை மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் ஆணையம் செய்கிறது. அதேபோல் வழக்குகளை விசாரணை செய்து நியாயமான தீா்வுக்கு வழிவகுப்பதுடன் மாற்றுத்திறனாளிக்கு ஏற்படும் பிரச்னைகள் சட்டப்படி அணுகுவதற்கும், தீா்வு காண்பதற்கும் ஆணையத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் .

இதில் கல்லூரி மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.