யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :7 டிசம்பர் 2025, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், ஏ. செக்காரப்பட்டியைச் சோ்ந்தவா் தனுஷ் (22). இவா் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தருமபுரி அருகே அல்லியூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த சரக்கு லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனுஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.