பலி
பலிபிரதிப் படம்

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தருமபுரியில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Published on

தருமபுரியில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கூகுட்ட மருதஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (70). தருமபுரி வந்திருந்த அவா், நான்குசாலைப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது அவ்வழியே வந்த அரசுப் பேருந்து அவா்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை போலீஸாா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு அவா் இறந்தாா்.

இது குறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com