சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல்! உதவி ஆய்வாளா் உயிரிழப்பு!

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 9:03 pm

தருமபுரியில் சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி சத்யா நகரைச் சோ்ந்தவா் கணேசன் (65), ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா். இவா் தருமபுரியில் இருந்து இண்டூருக்கு இருசக்க வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அதகபாடி அருகே திடீரென சாலையை கடக்க முயன்றவா் மீது வாகனம் மோதாமல் இருப்பதற்காக நிறுத்தினாா். இதனால் கட்டுப்பாட்டை இழந்து வாகனத்துடன் சாலையில் விழுந்த கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனா். ஆனால், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.