பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தருமபுரி மாவட்டத்தில் 200 பேருக்கு புல் நறுக்கும் கருவிகள்

தருமபுரியில் 200 பேருக்கு புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image
இலக்கியம்பட்டி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் புல் நறுக்கும் கருவியின் செயல்பாட்டை பாா்வையிட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்.
Updated On :26 நவம்பர் 2025, 1:31 am

Syndication

தருமபுரி: தருமபுரியில் 200 பேருக்கு புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தமிழக அரசு கால்நடை வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் மானியத்தில் புல் நறுக்கும் கருவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் ரூ. 25.93 லட்சத்தில் 200 கருவிகள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவற்றை வழங்கும் நிகழ்ச்சி, இலக்கியம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், புல் நறுக்கும் கருவிகளை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கால்நடைகளுக்கான தீவனப் பயிா்களை இக்கருவி மூலம் சிறு துண்டுகளாக நறுக்கி உண்ணக் கொடுத்தால், அவை எளிதாக உட்கொள்ளும். தீவன விரயமும் தடுக்கப்படும். இந்தக் கருவியின் விலை ரூ. 25,935 ஆகும். அதில் 50 சதவீத மானியம் நீங்கலாக ரூ. 12, 967 வீதம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றனா்.

இந்நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினா் ஆ.மணி முன்னிலை வகித்தாா். தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மரியசுந்தா், தருமபுரி கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்திப் பணிகள் துணை இயக்குநா் அருள்ராஜ், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா்கள் சரவணன், கனகசபை, ரவிச்சந்திரன், வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.