ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,000 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 6,000 கனஅடியாக குறைந்தது.
Published on

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 6,000 கனஅடியாக குறைந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 6,500 கனஅடியாக இருந்தது.

சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6,000 கனஅடியாக குறைந்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com