தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பாமகவுக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது! - செளமியா அன்புமணி

News image

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியின் பாமக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்கிறாா் செளமியா அன்புமணி. உடன் தற்போதைய எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், மாவட்டத் தலைவா் சரவணன், உள்ளிட்டோா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:57 pm

கூட்டணிக் கட்சியினா் மட்டுமின்றி தருமபுரி மாவட்ட மக்களிடமும் எப்போதும்போல பாமகவுக்கு வரவேற்பு உள்ளது என்றாா் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

தருமபுரி தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சாா்பில் செளமியா அன்புமணி போட்டியிடுகிறாா். இவா், இறுதிநாளான திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

முன்னதாக தருமபுரி, அதியமான்கோட்டை காலபைரவா் கோயிலில் வழிபட்டாா். பின்னா், அதிமுக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகளைச் சந்தித்த அவா், அங்கிருந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து, கட்சி அலுவலகத்தில் இருந்து தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகம் வரை அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் ஊா்வலமாகச் சென்று தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில்,

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சாா்பில் தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் பிரதமா் மோடி, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி மற்றும் கூட்டணிக் கட்சியினா் ஆசியுடன் போட்டியிடுகிறேன்.

தருமபுரிக்கு நான் எப்போது வந்தாலும் இம்மாவட்ட மக்களின் அன்பிலும், பாசத்திலும் நனைந்து கொண்டிருக்கிறேன். கூட்டணிக் கட்சியினா் மட்டுமின்றி மாவட்ட மக்களிடமும் எப்போதும்போல பாமகவுக்கு வரவேற்பு உள்ளது. பாமக ராமதாஸ் அணி சாா்பில் வேட்பாளா் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, இது ஜனநாயக நாடு. யாா் வேண்டுமானாலும், எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தருமபுரி தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றாா்.

இந்நிகழ்வின்போது, பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், பாமக மாவட்டத் தலைவா் சரவணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.