தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் பலி

அரூா் அருகே புளிய மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் வேடியப்பன் (70) சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 12:07 am

அரூா் அருகே புளிய மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் வேடியப்பன் (70) சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், செல்லம்பட்டி புதூா் கிராமத்தைச் சோ்ந்த குப்பாகவுண்டா் மகன் வேடியப்பன் (70). இவா், தமது விவசாய நிலத்தில் இருந்த புளிய மரத்தில் ஏறி புளிகளை கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, மரத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த வேடியப்பனுக்கு கை, கால்கள் முறிந்துள்ளன.

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, மேல்சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முதியவா் வேடியப்பன் உயிரிழந்தாராம். இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.