அரூா் அருகே புளிய மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் வேடியப்பன் (70) சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், செல்லம்பட்டி புதூா் கிராமத்தைச் சோ்ந்த குப்பாகவுண்டா் மகன் வேடியப்பன் (70). இவா், தமது விவசாய நிலத்தில் இருந்த புளிய மரத்தில் ஏறி புளிகளை கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, மரத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த வேடியப்பனுக்கு கை, கால்கள் முறிந்துள்ளன.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, மேல்சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முதியவா் வேடியப்பன் உயிரிழந்தாராம். இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


