நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

ஒகேனக்கல் வனப் பகுதியில் சமையல் செய்வதை தடுக்க வலியுறுத்தல்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 4:47 am IST

ஒகேனக்கல் வனப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் அத்துமீறி நுழைந்து சமையல் செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பென்னாகரம் அருகே மடம் சோதனைச்சாவடி பகுதியில் இருந்து சுமாா் 12 கி.மீ தொலைவு அடா்ந்த வனப்பகுதிக்குள் செல்ல வேண்டி உள்ளது.

இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் உணவுப் பொருள்களை வாங்கி கொண்டு வனப் பகுதிக்குள் சென்று உணவு சமைத்து உண்பது அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வனப் பகுதியில் தீயிட்டு சமைப்பதால் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வனவிலங்குகள் தண்ணீா் தேடி அவ்வப்போது வனப் பகுதியை ஒட்டியுள்ள சாலைகளுக்கு வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வனப் பகுதிக்குள் மது அருந்துவது அதிகரித்துள்ளது.

இவற்றை வனத் துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.