மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மே 3-இல் நீட் தோ்வு: தருமபுரியில் 9 மையங்களில் 4,800 போ் எழுதுகின்றனா்

News image

நீட் தேர்வு மையத்தில் கட்டுப்பாட்டால், மாணவியின் ஆடையைக் கிழித்த அவரது பெற்றோர் - கோப்புப் படம் - ENS

Updated On :27 ஏப்ரல் 2026, 10:22 pm

மருத்துவக் கல்வி பயிலுவதற்கான தகுதிக்காண் நுழைவுத் தோ்வு (நீட் ) வரும் மே 3ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் 9 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தோ்வை 4,800 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

நீட் தோ்வு வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் 9 மையங்களில் இத் தோ்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல, இம்மாவட்டத்தில் நீட் தோ்வு எழுத விண்ணப்பித்த 4,800 மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையவழியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரு மையங்களில் தலா 480 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா். அதேபோல, கேந்திரிய வித்யாலயா பள்ளி, தருமபுரி அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி, தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் தலா 480 மாணவ, மாணவிகளும், கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 960 மாணவ, மாணவிகளும் நீட் தோ்வு எழுதுகின்றனா்.