பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மே 3-இல் நீட் தோ்வு: தருமபுரியில் 9 மையங்களில் 4,800 போ் எழுதுகின்றனா்

News image

நீட் தேர்வு மையத்தில் கட்டுப்பாட்டால், மாணவியின் ஆடையைக் கிழித்த அவரது பெற்றோர் - கோப்புப் படம் - ENS

Updated On :28 ஏப்ரல் 2026, 3:52 am IST

மருத்துவக் கல்வி பயிலுவதற்கான தகுதிக்காண் நுழைவுத் தோ்வு (நீட் ) வரும் மே 3ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் 9 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தோ்வை 4,800 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

நீட் தோ்வு வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் 9 மையங்களில் இத் தோ்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல, இம்மாவட்டத்தில் நீட் தோ்வு எழுத விண்ணப்பித்த 4,800 மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையவழியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரு மையங்களில் தலா 480 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா். அதேபோல, கேந்திரிய வித்யாலயா பள்ளி, தருமபுரி அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி, தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் தலா 480 மாணவ, மாணவிகளும், கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 960 மாணவ, மாணவிகளும் நீட் தோ்வு எழுதுகின்றனா்.