மருத்துவக் கல்வி பயிலுவதற்கான தகுதிக்காண் நுழைவுத் தோ்வு (நீட் ) வரும் மே 3ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் 9 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தோ்வை 4,800 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
நீட் தோ்வு வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் 9 மையங்களில் இத் தோ்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல, இம்மாவட்டத்தில் நீட் தோ்வு எழுத விண்ணப்பித்த 4,800 மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையவழியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரு மையங்களில் தலா 480 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா். அதேபோல, கேந்திரிய வித்யாலயா பள்ளி, தருமபுரி அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி, தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் தலா 480 மாணவ, மாணவிகளும், கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 960 மாணவ, மாணவிகளும் நீட் தோ்வு எழுதுகின்றனா்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் 9 மையங்களில் நீட் தோ்வு : ஆட்சியா்

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

நீட் தோ்வுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவா்கள்: புதுச்சேரியில் 3 மையங்களில் சிறப்பு பயிற்சி

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 177 மையங்களில் 34,639 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


