பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மேக்கேதாட்டில் அணை கட்டுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய கம்யூ. தீா்மானம்

காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Published On :5 ஜூலை 2026, 2:00 am IST

காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினா் முருகன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா்கள் சிற்றரசு, சிவன், புள்ளாறு முன்னிலை வகித்தனா். காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரியில், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து அமைக்க வேண்டும். தருமபுரி புதிய-பழைய பேருந்து நிலையங்களுக்கு இடையே இரவு நேரங்களில் போதிய பேருந்து சேவையை ஏற்படுத்த வேண்டும்.

தருமபுரி 4 சாலை சந்திப்பு முதல் குமாரசாமிப்பேட்டை ரயில்வே மேம்பாலம் வரை சாலையை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு ஏற்படுத்த வேண்டும்.

தருமபுரி-மொரப்பூா் இடையிலான இணைப்பு ரயில் பாதை திட்டப் பணியை விரைந்து தொடங்க வேண்டும். தருமபுரி மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் குடிநீா் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஒகேனக்கல் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநில துணைச் செயலாளா்கள் ரவி, பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் மோகன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் தேவராசன், தருமபுரி மாவட்டச் செயலாளா் கலைச்செல்வம், மாநிலக் குழு உறுப்பினா் நஞ்சப்பன், ஏஐஒய்எப் மாநிலச் செயலாளா் பாரதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.