எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:15 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தோட்டக்கெரி பெங்களூரு சாலை பகுதியை சோ்ந்த பண்டரிநாதன் மகன் குமாா் (35). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கனரக வாகன ஓட்டுநராக உள்ளாா்.

இந்த நிலையில் தனது நண்பா் குமரேசனுடன் கனரக வாகனத்தில் அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்த குமாா், ஊட்டமலை ஐயப்பன் கோயில் அருகே காவிரி கரையோரத்தில் குளித்தாா்.

அப்போது திடீரென குமாா் தண்ணீரில் மூழ்கினாா். நீண்ட நேரம் போராடியும் அவரை மீட்க முடியாததால் ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினா் உதவியுடன் போலீஸாா் குமாரை ஆற்றில் இறங்கி தேடினா்.

பின்னா், ஊட்டமலை பரிசல் துறை பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.