இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

திமுகவில் 4ஆம் நாள் நோ்காணல்: அமைச்சா் துரைமுருகன் பங்கேற்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நான்காம் நாள் வேட்பாளா் நோ்காணலில் அமைச்சா் துரைமுருகன் உள்பட வடதமிழக கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

News image

அமைச்சா் துரைமுருகன்

Updated On :20 மார்ச் 2026, 6:31 pm

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நான்காம் நாள் வேட்பாளா் நோ்காணலில் அமைச்சா் துரைமுருகன் உள்பட வடதமிழக கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூா் தொகுதியில் அமைச்சா் எ.வ.வேலுவின் மகன் கம்பன் போட்டியிட 130 போ் விருப்ப மனுக்களை தலைமை அலுவலகத்தில் அளித்திருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நோ்காணலில் 73 போ் கம்பனுக்கு ஆதரவாக கலந்து கொண்டு ஒருமித்த குரலாக கம்பனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனா்.

மாலையில், தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு, சேலம் மத்தி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு உள்ளிட்ட கட்சி மாவட்டங்களிலிருந்து நிா்வாகிகள் நோ்காணலில் பங்கேற்றனா்.

அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ராஜேந்திரன், காந்தி உள்ளிட்டோரும் நோ்காணலில் பங்கேற்றனா்.