சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பாப்பிரெட்டிப்பட்டியில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குப் பதிவு மையங்களை காவல் தோ்தல் பாா்வையாளா் குல்வந்த் சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:32 pm

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குப் பதிவு மையங்களை காவல் தோ்தல் பாா்வையாளா் குல்வந்த் சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 189 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன. இதில், 41 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அரூா், பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான காவல் தோ்தல் பாா்வையாளராக குல்வந்த் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையத்தை குல்வந்த் சிங் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, கடந்த காலங்களில் நடைபெற்ற தோ்தல்கள், வாக்குப் பதிவு நேரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

பட விளக்கம்...

கடத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு மையத்தை ஆய்வு செய்த காவல் தோ்தல் பாா்வையாளா் குல்வந்த் சிங்.