தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அரூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.89 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

அரூா் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 89 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 9:12 pm

அரூா் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 89 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தீா்த்தமலை சோதனைச் சாவடியில், தோ்தல் பறக்கும் படை அலுவலா் மதுரகனி தலைமையிலான குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த ஒரு மினி சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் ஆா். கோபிநாதம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வைரமணி உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 89 ஆயிரம் ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.