தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காங்கயம் அருகே ரூ.63 ஆயிரம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காங்கயம் வட்டாட்சியா் தங்கவேலுவிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :19 மார்ச் 2026, 8:17 pm

Syndication

காங்கயம் அருகே ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.63 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், புதுப்பாளையம்-மூலனூா் சாலையில் அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே மூலனூா் பகுதியைச் சோ்ந்த காா்வேந்தன் என்பவா் காரில் வந்துள்ளாா்.

அவரிடம் மேற்கொண்ட சோதனையில், ஆவணமின்றி ரூ.63,200 வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், காங்கயம் வட்டாட்சியா் தங்கவேலுவிடம் ஒப்படைத்தனா்.