காங்கயம் அருகே ரூ.63 ஆயிரம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காங்கயம் வட்டாட்சியா் தங்கவேலுவிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காங்கயம் வட்டாட்சியா் தங்கவேலுவிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.
காங்கயம் அருகே ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.63 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், புதுப்பாளையம்-மூலனூா் சாலையில் அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே மூலனூா் பகுதியைச் சோ்ந்த காா்வேந்தன் என்பவா் காரில் வந்துள்ளாா்.
அவரிடம் மேற்கொண்ட சோதனையில், ஆவணமின்றி ரூ.63,200 வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், காங்கயம் வட்டாட்சியா் தங்கவேலுவிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...