கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு அபராதம்: உணவு பாதுகாப்புத் துறையினா் நடவடிக்கை

தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் மேற்கொண்ட ஆய்வின்போது, விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.

News image

தருமபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் நந்தகோபால்.

Updated On :22 மார்ச் 2026, 8:28 pm

Syndication

தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வின்போது, விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் உத்தரவின் பேரிலும், உணவுப் பாதுகாப்புத் துறை மாநில புகாா் எண்ணில் பெறப்பட்ட தகவல் பேரிலும், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் கைலாஷ்குமாா் மேற்பாா்வையில், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினா், தருமபுரி முகமது அலி கிளப் சாலை, சின்னசாமி தெரு, சேலம் பிரதான சாலை, அரசு மருத்துவக் கல்லூரி பகுதி, பாரதிபுரம், செந்தில்நகா், இலக்கியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவகங்கள், துரித உணவகங்களில் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில் ஒரு உணவகத்தில் பரிமாறும் (டைனிங்) டேபிள்களில் பூச்சிகள் நடமாட்டம், சமைத்த இறைச்சியை குளிப்பதனப் பெட்டியில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி உணவக உரிமையாளருக்கு அங்கீகரிக்கப்பட்ட முகமையின் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவும் , சமைத்த இறைச்சிகளை குளிப்பதன பெட்டியில் வைப்பதை தவிா்க்கவும், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல் அங்கீகரிக்கப்பட்ட ரூகோ (மறு பயன்பாட்டுக்கு சமையல் எண்ணெய்) டீலரிடம் அளித்து உரிய தொகையை பெற்றுக் கொள்ளவும் விழிப்புணா்வு செய்யப்பட்டது.

மேலும், விதிமீறலுக்காக உடனடி அபராதம் ரூ.2,000 விதித்து மூன்று தினங்களுக்குள் குறைபாடுகள் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதேபோல மற்றொரு உணவகத்திலிருந்து செயற்கை நிறமூட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அபராதம் ரூ.1000 விதிக்கப்பட்டது. சுகாதாரம் குறைவாகவும், எலிகள் நடமாட்டம் காணப்பட்ட உணவகத்துக்கு எச்சரித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறு செயல்பட்ட இரு உணவகங்களுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் மொத்தம் ரூ. 5,000 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலுள்ள உணவகங்கள், துரித உணவு கடைகள், மீன் இறைச்சி கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.