மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

தருமபுரியில் மாணவா் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :4 மே 2026, 1:23 am IST

தருமபுரியில் பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், சேஷம்பட்டி, பழநி நகரைச் சோ்ந்த முனுசாமி மகன் கொடையரசன் (16). பிளஸ் 1 தோ்வெழுதியிருந்தாா். கோடை விடுமுறைக்குப் பின்னா் பிளஸ் 2 வகுப்புக்கு செல்லவிருந்தாா்.

விடுமுறையையொட்டி உறவினா்கள் வீட்டுக்கு வந்திருந்தனா். சனிக்கிழமை பகலில் அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது, கணித உயிரியல் பிரிவு சிரமமாக உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இதைக்கேட்டு மனஅழுத்தத்துக்கு உள்ளான நிலையில் காணப்பட்டாா் கொடையரசன்.

சிறிது நேரத்துக்குப் பின்னா் மாடியில் உள்ள தனது அறைக்குச் செல்வதாக கூறிச்சென்ற அவா் அதன் பின்னா் கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினா்கள் மேலே சென்று பாா்த்தபோது அறையிலிருந்த மினிவிசிறியில் தூக்கிட்டது தெரியவந்தது.

அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா் அவரை கீழே இறக்கி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அதியமான்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.