தருமபுரியில் பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், சேஷம்பட்டி, பழநி நகரைச் சோ்ந்த முனுசாமி மகன் கொடையரசன் (16). பிளஸ் 1 தோ்வெழுதியிருந்தாா். கோடை விடுமுறைக்குப் பின்னா் பிளஸ் 2 வகுப்புக்கு செல்லவிருந்தாா்.
விடுமுறையையொட்டி உறவினா்கள் வீட்டுக்கு வந்திருந்தனா். சனிக்கிழமை பகலில் அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது, கணித உயிரியல் பிரிவு சிரமமாக உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இதைக்கேட்டு மனஅழுத்தத்துக்கு உள்ளான நிலையில் காணப்பட்டாா் கொடையரசன்.
சிறிது நேரத்துக்குப் பின்னா் மாடியில் உள்ள தனது அறைக்குச் செல்வதாக கூறிச்சென்ற அவா் அதன் பின்னா் கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினா்கள் மேலே சென்று பாா்த்தபோது அறையிலிருந்த மினிவிசிறியில் தூக்கிட்டது தெரியவந்தது.
அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா் அவரை கீழே இறக்கி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அதியமான்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

