ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை

News image

இளம்பெண் தற்கொலை

Updated On :4 மே 2026, 1:24 am IST

தருமபுரி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பொடுத்தம்பட்டி அருகேயுள்ள ஒண்டிக்கான்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகள் ரேவதி (27). இவருக்கு திருமணமாகி ஆண், பெண் என இருகுழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி பெற்றோா் வீட்டுக்கு வந்திருந்த ரேவதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பாப்பாரப்பட்டி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னா் தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக மதிகோன்பாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதில் வயிற்றுவலி காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.