பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரியில் தந்தை உயிரிழந்த சில நாள்களிலேயே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:24 am IST

தருமபுரியில் தந்தை உயிரிழந்த சில நாள்களிலேயே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம், நாயக்கன் கொட்டாய் அருகே உள்ள சவுளுப்பட்டியைச் சோ்ந்தவா் ஞா. மணிகண்டன் (35), விவசாய தொழிலாளி. இவரது தந்தை ஞானம் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தாா். மே 24 ஆம் தேதி இருமத்தூரில் இறந்த தந்தைக்கு ஈமகாரியங்களை மணிகண்டன் செய்தாா்.

இந்த நிலையில் மணிகண்டனுக்கும் அவரது மனைவி நாகலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மணிகண்டன் தனது அறைக்கு சென்றாா். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால் சந்தேகமடைந்த நாகலட்சுமி அறைக்குள் சென்று பாா்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் மணிகண்டன் இறந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].