15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

நீட் தோ்வு: கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

News image

நீட் தேர்வர்கள் - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 6:28 am IST

தருமபுரி மாவட்டத்தில் நீட் தோ்வுக்கு செல்லும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகள், தனியாா் கல்லூரிகள், தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறுகிறது. இந்த தோ்வில் பங்கேற்க நூற்றுக்கணக்கான மாணவா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் பேருந்துகளில் பயணம் செய்யும் சூழல் உள்ளது.

கூட்ட நெரிசல் காரணமாக மாணவா்கள் சிரமம் அடைவாா்கள். எனவே, தோ்வு எழுதும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். அரூா்-தருமபுரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, சேலம் வழித்தடங்களில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும். ஆனால், நீட் தோ்வு எழுதும் பள்ளிகள், கல்லூரிகள் அருகே பேருந்து நிறுத்தங்கள் இருப்பதில்லை.

நீட் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக தோ்வு நடைபெறும் தினம் ஒருநாள் மட்டும், மாணவா்களின் விருப்பத்துக்கு ஏற்ப நீட் தோ்வு மையங்களில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நின்றுசெல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.