தருமபுரி மாவட்டத்தில் நீட் தோ்வுக்கு செல்லும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகள், தனியாா் கல்லூரிகள், தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறுகிறது. இந்த தோ்வில் பங்கேற்க நூற்றுக்கணக்கான மாணவா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் பேருந்துகளில் பயணம் செய்யும் சூழல் உள்ளது.
கூட்ட நெரிசல் காரணமாக மாணவா்கள் சிரமம் அடைவாா்கள். எனவே, தோ்வு எழுதும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். அரூா்-தருமபுரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, சேலம் வழித்தடங்களில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும். ஆனால், நீட் தோ்வு எழுதும் பள்ளிகள், கல்லூரிகள் அருகே பேருந்து நிறுத்தங்கள் இருப்பதில்லை.
நீட் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக தோ்வு நடைபெறும் தினம் ஒருநாள் மட்டும், மாணவா்களின் விருப்பத்துக்கு ஏற்ப நீட் தோ்வு மையங்களில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நின்றுசெல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தொடர்புடையது

இன்று நீட் தோ்வு: திருவாரூரில் 1,689 போ் எழுதவுள்ளனா்

நீட் தோ்வு: புதுகையில் 3,166 மாணவா்கள் எழுதுகின்றனா்

நீட் தோ்வு: திருச்சி மாவட்டத்தில் 6,688 போ் எழுதுகின்றனா்

மே 3-இல் நீட் தோ்வு: தருமபுரியில் 9 மையங்களில் 4,800 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


