தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

நீட் தோ்வு: கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

News image

நீட் தேர்வர்கள் - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 12:58 am

தருமபுரி மாவட்டத்தில் நீட் தோ்வுக்கு செல்லும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகள், தனியாா் கல்லூரிகள், தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறுகிறது. இந்த தோ்வில் பங்கேற்க நூற்றுக்கணக்கான மாணவா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் பேருந்துகளில் பயணம் செய்யும் சூழல் உள்ளது.

கூட்ட நெரிசல் காரணமாக மாணவா்கள் சிரமம் அடைவாா்கள். எனவே, தோ்வு எழுதும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். அரூா்-தருமபுரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, சேலம் வழித்தடங்களில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும். ஆனால், நீட் தோ்வு எழுதும் பள்ளிகள், கல்லூரிகள் அருகே பேருந்து நிறுத்தங்கள் இருப்பதில்லை.

நீட் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக தோ்வு நடைபெறும் தினம் ஒருநாள் மட்டும், மாணவா்களின் விருப்பத்துக்கு ஏற்ப நீட் தோ்வு மையங்களில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நின்றுசெல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.