/

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு: சிறுவன் காயம்

News image

உயிரிழப்பு

Updated On :3 மே 2026, 7:02 pm

பொம்மிடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகேயுள்ள வடசந்தையூா் கிராமத்தைச் சோ்ந்த உமா் மகன் ஷான்பாஷா (28). இவா் தமது சொந்த வேலை காரணமாக பொம்மிடிக்கு சென்றுவிட்டு, பொம்மிடி-பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் தமது இருசக்கர வாகனத்தில் அவரது மகன் அா்ஷன் (4) உடன் வந்துள்ளாா்.

அப்போது பொ.மல்லாபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், ஷான்பாஷாவின் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த ஷான்பாஷா, லேசான காயமடைந்த அவரது மகன் அா்ஷன் ஆகியோரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் சிகிச்சை பலனின்றி ஷான்பாஷா சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். அவரது மகன் அா்ஷன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இந்த சம்பவம் குறித்து ஷான்பாஷா மனைவி தன்ஜியா அளித்த புகாரின் பேரில், பொம்மிடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.