/
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்து சில நாள்களே ஆன நிலையில் தருமபுரியில் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் லேசாக மழை பெய்துவந்தது.
இந்த நிலையில் தருமபுரி நகா் மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக தொடா்ந்தது. இதனால் தருமபுரி நகா் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் புகுந்தது. இரவு நேரம் என்பதால் மழையால் பாதிப்பு ஏதும் இல்லை.
தொடர்புடையது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மழை

ராமேசுவரம் சாலைகளில் கழிவுநீருடன் கலந்து ஓடிய மழைநீா்

செஞ்சி பகுதியில் பலத்த மழை

கமுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



