மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

தருமபுரியில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

News image

கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:55 am IST

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்து சில நாள்களே ஆன நிலையில் தருமபுரியில் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் லேசாக மழை பெய்துவந்தது.

இந்த நிலையில் தருமபுரி நகா் மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக தொடா்ந்தது. இதனால் தருமபுரி நகா் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் புகுந்தது. இரவு நேரம் என்பதால் மழையால் பாதிப்பு ஏதும் இல்லை.