எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒரு நபர் விசாரணை ஆணையம் தருமபுரியில் முகாம்: ஆட்சியர், கண்காணிப்பாளர் விசாரணைக்கு ஆஜர்

இளவரசன் உயிரிழந்த வழக்கை விசாரிக்கும், ஒரு நபர் ஆணையம் தருமபுரியில் முகாமிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு ஆஜராகினர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:56 am

DIN

 இளவரசன் உயிரிழந்த வழக்கை விசாரிக்கும், ஒரு நபர் ஆணையம் தருமபுரியில் முகாமிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு ஆஜராகினர்.
தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் அடுத்த நத்தம் காலனியைச் சேர்ந்தவர் இளவசரன். வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளவசன், கடந்த 2013 ஜூலை, 4-ஆம் தேதி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இளவரசன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை இளங்கோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இதனையடுத்து, இவ்வழக்கை விசாரிக்க தமிழக அரசு,  ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த வழக்கில், ஒரு நபர் விசாரணை ஆணையம், இளவரசனின் பெற்றோர் இளங்கோ, கிருஷ்ணவேணி, திவ்யா அவரது தாய் தேன்மொழி உள்பட 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், தருமபுரி பயணியர் மாளிகையில் புதன்கிழமை ஒருநபர் விசாரணை ஆணையம் மீண்டும் முகாமிட்டு விசாரணை நடத்தியது. இதில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவர் அ.சங்கர் மற்றும் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி ஆகியோர் நீதிபதி முன், விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.இந்த ஆணையத்தின் விசாரணை முகாம் வியாழக்கிழமையும் (நவ.16) தொடர்ந்து நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.