மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற 11 பேர் கைது

தருமபுரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற 11 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :21 மே 2018, 10:46 pm

தருமபுரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற 11 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி நகரில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், தருமபுரி நகரக் காவல் ஆய்வாளர் ரத்தினகுமார், உதவி ஆய்வாளர் சுந்தரம், கிருஷ்ணவேணி உள்ளிட்டோர், ஆறுமுக ஆசாரி தெரு, கடைவீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். இச் சோதனையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப்பொருள்களை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, புகையிலை பொருள்கள் விற்பனை
செய்த குமார்(34), மணிவண்ணன், ராஜேந்திரன்(58), சண்முகம்(40), ராமமூர்த்தி, ராஜேஸ்வரி(44) உள்பட 11 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய நரேஷ்குமார்(24) மற்றும் லால்ராம் செளத்ரி ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.