இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

மின்சாரம் பாய்ந்ததில் ஆசிரியர் சாவு

கடத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஸ்டாலின் (38) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

Updated On :5 நவம்பர் 2018, 7:38 am IST

கடத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஸ்டாலின் (38) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பழைய புதுரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் மகன் ஸ்டாலின் (38). இவர் வெங்கட்டம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். கடத்தூர்-புதுரெட்டியூர் சாலையில் ஸ்டாலினுக்கு சொந்தமான புதிய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.  
இந்த நிலையில், வீட்டின் 2-ஆவது மாடியில் இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. அப்போது, வீட்டின் அருகே செல்லும் மின்சார கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் ஆசிரியர் ஸ்டாலின், அவரது தாய் சிவகாமி (58), கலியபெருமாள் (46) ஆகிய மூவரும் காயமடைந்தனர்.
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் ஸ்டாலின் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த சிவகாமி, கலியபெருமாள் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.